Thursday, 11 April 2019

சுருதி

நீ
இல்லாத வீட்டில்
நீ இல்லாமல் இருப்பதை
அங்கும் இங்கும்
நீ நடக்கையிலெல்லாம்
கேட்கும்
கொலுசொலி மூலம்
நினைவுபடுத்திக் கொள்கிறேன்
தரை தொடும்
உன் பாதங்கள்
அணுக்கமாய் இசைக்கும் போது
அதன் பின்
கேட்கின்றன
உன் கொலுசுகளின் சங்கீதங்கள்
நீ
அளிக்கும் உணவில்
சுவை கூட்டுகின்றன
சமையலறையில்
மிக மென்மையாய்
கேட்கும்
உன் கண்ணாடி வளையல்களின்
கீதங்கள்