Saturday, 18 May 2019

பாறை நீர் மென்மை

ஒரு பேரழகுக்கு முன்னால்
நுண்ணிய மென்மை அடர்ந்திருக்கும்
பெருமௌனத்தின் முன்னால்
கணங்களை ஒளிரச் செய்யும்
அன்பின் அற்புதங்களுக்கு முன்னால்
ஓர் எளிய மனம் வழங்கும்
மன்னிப்பின் முன்னால்

வெள்ளம்
சில நாட்கள்
வடிந்த
நதியின் தடத்தின்
பாறை வழுவழுப்பை

மழலை மாறா
தன் உள்ளங்கைகளால்
ஒட்டி
எடுத்துச் செல்கிறான்
இன்னும் நடை பயிலா குழந்தை