Friday 28 June 2019

சரணம்

கானகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
ஒடித்த சிறுகிளைகளை தூக்கி எறிந்து விளையாடிய
ஆனைக்கூட்டம்
என் துயரங்களை கிளையுடன் சேர்த்து பந்தாடியது
சட்டெனக் கடந்த கீரியொன்று
ஒரு கணம் நோக்கி
ஒரு அவசரவேலை என்றபடி
கடக்கையில்
யார் இவன்
என
நினைவின் அடுக்குகளில்
துழாவியது
எனது அடையாளங்களை
உகிர்களால் கொத்தின
வான் பறந்த பறவைகள்
அருவி நீரில்
குளிர்ந்து கிடக்கும்
அசையாப் பாறையிடம்
சரணடைந்தேன்
மலைச்சரிவில் கண்ட
அஸ்தமன சூரியன்
ஒளியாய் நிரம்பிய
அகத்துடன்