கானகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
ஒடித்த சிறுகிளைகளை தூக்கி எறிந்து விளையாடிய
ஆனைக்கூட்டம்
என் துயரங்களை கிளையுடன் சேர்த்து பந்தாடியது
சட்டெனக் கடந்த கீரியொன்று
ஒரு கணம் நோக்கி
ஒரு அவசரவேலை என்றபடி
கடக்கையில்
யார் இவன்
என
நினைவின் அடுக்குகளில்
துழாவியது
எனது அடையாளங்களை
உகிர்களால் கொத்தின
வான் பறந்த பறவைகள்
அருவி நீரில்
குளிர்ந்து கிடக்கும்
அசையாப் பாறையிடம்
சரணடைந்தேன்
மலைச்சரிவில் கண்ட
அஸ்தமன சூரியன்
ஒளியாய் நிரம்பிய
அகத்துடன்
ஒடித்த சிறுகிளைகளை தூக்கி எறிந்து விளையாடிய
ஆனைக்கூட்டம்
என் துயரங்களை கிளையுடன் சேர்த்து பந்தாடியது
சட்டெனக் கடந்த கீரியொன்று
ஒரு கணம் நோக்கி
ஒரு அவசரவேலை என்றபடி
கடக்கையில்
யார் இவன்
என
நினைவின் அடுக்குகளில்
துழாவியது
எனது அடையாளங்களை
உகிர்களால் கொத்தின
வான் பறந்த பறவைகள்
அருவி நீரில்
குளிர்ந்து கிடக்கும்
அசையாப் பாறையிடம்
சரணடைந்தேன்
மலைச்சரிவில் கண்ட
அஸ்தமன சூரியன்
ஒளியாய் நிரம்பிய
அகத்துடன்