Wednesday 12 June 2019

அடல் பிஹாரி வாஜ்பாய்

நான் இந்திய நிலமெங்கும் மோட்டார்சைக்கிளில் அலைந்திருக்கிறேன். தங்க நாற்கரச் சாலை கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் சமூக மற்றும் பொருளியல் முகத்தை மாற்றியமைத்தது என்பது வரலாறு. இந்தியாவின் முதன்மை நரம்புகளாகிய அச்சாலைகளில் சரக்கு வாகனங்கள் என்னும் குருதி பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதும் அதுவே நாட்டின் பொருளாதாரத்துக்கு ஜீவனாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அது வாஜ்பாய் அவர்களின் கனவுத் திட்டம். தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு.

அதே போல முக்கியத்துவம் கொண்டது அவரது ‘’கிராமச் சாலைகள் திட்டம்’’.

’’செல்வம் சாலைகளை உண்டாக்கவில்லை; சாலைகள் தான் செல்வத்தை உண்டாக்குகின்றன’’ என்றார் தாமஸ் ஜெபர்சன்.