Monday, 29 July 2019

பாதையின்
இரு மருங்கிலும்
பூத்திருக்கின்றன
வண்ண மலர்கள்
நீ
ஒரு கைவேலையாய்
அவசரமாகக் கடந்து செல்கிறாய்
எல்லா மலர்களும் சிரிக்கின்றன
நீ
ஒரு மலரின் சிரிப்பை
சட்டென பார்க்கிறாய்
ஒரு கணம்
தொலைவில் இருக்கும்
அம்மலருக்குக் கை நீட்டுகிறாய்
தினமும்
கை நீட்டும் குழந்தைக்கு
ஒளிரும் தன் கிரணங்களைத் தருகிறது
வானத்து நிலவு