Tuesday 30 July 2019

பெரியவற்றால்

என் கண்ணீரைத் துடைக்காதீர்கள்
எனக்கு ஆறுதல் சொல்லாதீர்கள்
எவ்விதமான தேறுதல் சொல்லையும் உச்சரிக்காதீர்கள்
கண்களின் ஈரம் உலரும் போது
அன்பின் சுனைகள் மேலும் ஊற்றெடுக்கும்
அலைக்கழியும் மனம்
மௌனத்தின் பெருவெளி முன்
துயரத்தின் சொற்களற்று நிற்கும்
விரிவாகிக் கொண்டேயிருக்கும் விசும்பிலிருந்து
ஒவ்வொரு புதிய தினத்தின்
நம்பிக்கைகள்
உருவாகி வரும்

பெரியவற்றால்
மிகப் பெரியவற்றால்
ஆனது
இந்த உலகம்
இந்த வாழ்வு