என் கண்ணீரைத் துடைக்காதீர்கள்
எனக்கு ஆறுதல் சொல்லாதீர்கள்
எவ்விதமான தேறுதல் சொல்லையும் உச்சரிக்காதீர்கள்
கண்களின் ஈரம் உலரும் போது
அன்பின் சுனைகள் மேலும் ஊற்றெடுக்கும்
அலைக்கழியும் மனம்
மௌனத்தின் பெருவெளி முன்
துயரத்தின் சொற்களற்று நிற்கும்
விரிவாகிக் கொண்டேயிருக்கும் விசும்பிலிருந்து
ஒவ்வொரு புதிய தினத்தின்
நம்பிக்கைகள்
உருவாகி வரும்
பெரியவற்றால்
மிகப் பெரியவற்றால்
ஆனது
இந்த உலகம்
இந்த வாழ்வு
எனக்கு ஆறுதல் சொல்லாதீர்கள்
எவ்விதமான தேறுதல் சொல்லையும் உச்சரிக்காதீர்கள்
கண்களின் ஈரம் உலரும் போது
அன்பின் சுனைகள் மேலும் ஊற்றெடுக்கும்
அலைக்கழியும் மனம்
மௌனத்தின் பெருவெளி முன்
துயரத்தின் சொற்களற்று நிற்கும்
விரிவாகிக் கொண்டேயிருக்கும் விசும்பிலிருந்து
ஒவ்வொரு புதிய தினத்தின்
நம்பிக்கைகள்
உருவாகி வரும்
பெரியவற்றால்
மிகப் பெரியவற்றால்
ஆனது
இந்த உலகம்
இந்த வாழ்வு