Saturday 6 July 2019

பாரதி நினைவுகள் - மகாகவி பாரதியார் வரலாறு

சமீபத்தில் யதுகிரி அம்மாள் எழுதிய ‘’பாரதி நினைவுகள்’’ நூலை வாசித்தேன். இன்று வ.ரா எழுதிய மகாகவி பாரதியார் வரலாறு நூலை வாசித்தேன். வ.ரா நூலை வாசிக்கும் தோறும் யதுகிரி அம்மாளின் நூல் இன்னும் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிக் கொண்டேயிருந்தது. யதுகிரி அம்மாள் பாரதியின் வளர்ப்பு மகள் போன்றவர். பாரதியால் சக கலை மனமாக நினைக்கப்பட்டவர். அவர் மனதில் பாரதியின் ஆளுமையும் சொற்களும் எண்ணங்களும் வலுவாக இருக்கின்றன. அவர் பாரதியின் கண்கள் வழியாகவே உலகைக் காண்கிறார். பாரதியின் கண்கள் அவரிடமும் இருக்கின்றன. அவர் குறிப்புகளின் வழியே ஒரு மகாகலைஞன் ஜீவனுடன் எழுந்து வருகிறான். யதுகிரி அம்மாளின் ‘’பாரதி நினைவுகள்’’ பாரதி வரலாறுகளில் மிக முக்கியமானது.