Sunday 7 July 2019

காற்றால் இலைகள் அசையும்
பசுமரமென
உன் சீரான மெல்லிய
உயிர்மூச்சுடன்
வானுக்குக் கீழே
தனித்து
நின்றிருக்கிறாய்
எதையும் பொறுக்கும் புவி
உன் பாதங்களை
ஏந்திக் கொள்கிறது
ஓர் அரிய மலரென
முடிவின்மையின் வெளி
உன் மேல் பரவுகிறது
அன்பின் முகில்களாக