அகத்தின் புறச்சுவர்களைக் கழுவிக் கொண்டிருக்கிறது
நள்ளிரவில் பெய்யும் மழை
ஈரம் நிரம்பிய காற்று
சுவாசப் பாதைகளை
தொட்டுச் செல்கிறது
ஓயாமல்
உறக்கத்தில் புரண்டு படுப்பவள்
எதிர்பாராமல்
விழித்துக் கொள்கிறாள்
அறையெங்கும் இருக்கும் தனிமை
ஒரு கணம்
தனிமை அவளை அச்சுறுத்துகிறது
தனித்து விடப்படுதலின்
எண்ணற்ற சாத்தியங்களாலான
உலகை
தினமும் கடந்து செல்வதை
எண்ணும் போது
நீர் திரள்கிறது கண்களில்
அழக்கூடாது
என நினைத்துக் கொள்கிறாள்
அவளது ஒரு கை
மறு கையின்
ஒற்றை வளையலைத்
தொடுகிறது
இந்த உலகில்
துணையாக
குறைந்தபட்சம்
ஓர் இறுக்கமான உலோகம்
எஞ்சி விடுகிறது
நள்ளிரவில் பெய்யும் மழை
ஈரம் நிரம்பிய காற்று
சுவாசப் பாதைகளை
தொட்டுச் செல்கிறது
ஓயாமல்
உறக்கத்தில் புரண்டு படுப்பவள்
எதிர்பாராமல்
விழித்துக் கொள்கிறாள்
அறையெங்கும் இருக்கும் தனிமை
ஒரு கணம்
தனிமை அவளை அச்சுறுத்துகிறது
தனித்து விடப்படுதலின்
எண்ணற்ற சாத்தியங்களாலான
உலகை
தினமும் கடந்து செல்வதை
எண்ணும் போது
நீர் திரள்கிறது கண்களில்
அழக்கூடாது
என நினைத்துக் கொள்கிறாள்
அவளது ஒரு கை
மறு கையின்
ஒற்றை வளையலைத்
தொடுகிறது
இந்த உலகில்
துணையாக
குறைந்தபட்சம்
ஓர் இறுக்கமான உலோகம்
எஞ்சி விடுகிறது