Thursday, 12 September 2019

நீ
எங்கும் இருக்கிறாய்
மரியாதைக்குரிய ஒரு பார்வையில்
பணிவான ஓர் உணர்வில்
உரைக்கப்படும் ஓர் இன்சொல்லில்
நன்றி நவிலலின் ஒரு கண்ணீர்த் துளியில்
மொழியப்படும் ஆறுதலில்
தாகம் தீர்க்கும் தண்ணீரில்
நுண்ணிய அன்பில்
அன்பின் பேருருவில்
நீ
எங்கும் இருக்கிறாய்