அன்னையரே
அன்னை உணர்வே
அன்னைத் தெய்வங்களே
நின் கருணை
கருக்கிருட்டாக
செஞ்சூரியனாக
அந்தியின் முதல் விண்மீனாக
வானத்து நிலவாக
பாயும் நதிகளாக
வயல்களின் பச்சை முளையாக
எங்களைச் சூழ்கிறது
வாழ்க்கை என்றும் எம்மைத் தளைக்காதிருக்கட்டும்
நின் கருணை
எம் விடுதலையாக
இருக்கட்டும்
அன்னை உணர்வே
அன்னைத் தெய்வங்களே
நின் கருணை
கருக்கிருட்டாக
செஞ்சூரியனாக
அந்தியின் முதல் விண்மீனாக
வானத்து நிலவாக
பாயும் நதிகளாக
வயல்களின் பச்சை முளையாக
எங்களைச் சூழ்கிறது
வாழ்க்கை என்றும் எம்மைத் தளைக்காதிருக்கட்டும்
நின் கருணை
எம் விடுதலையாக
இருக்கட்டும்