Sunday 15 December 2019

உனக்காக

காத்திருந்த
ஆற்றுப்பாலத்தின் கீழே
சேற்று நிறத்தில்
பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது
வெள்ளம்

இன்றும்
அந்த அரசமரத்தின்
சிற்றகலில்
காற்றில் அலைகிறது
தீபம்
சுடரும் பிராத்தனைகளுடன்

பேருந்தில்
இறங்கும்
பள்ளிக்குழந்தைகள் குழாமில்
அடம் பிடிக்கும் குழந்தைகளில்
சிலர்
அமைதியான குழந்தைகள் ஆயினர்
புதிதாக
சில அடம் பிடிக்கும் குழந்தைகள்
இணைந்து கொண்டன

மாலையின் முதல் நட்சத்திரம்
எப்போதும் போல்
அழகாய்
மிக அழகாய்
இருக்கிறது

அந்திப் பொழுதில்
கவியும்
மென் சோகத்தில்

உன்னைப் பற்றிய
நினைவுகள்
சிதறிப் பரவுகின்றன
திசை எங்கும்

இல்லம் திரும்புதல்
என்பது
எவ்வாறு