Thursday 23 January 2020

பறவைச் சத்திரங்கள்

அகமதாபாத் சாலைகளில் பரவலாக பறவைகளுக்கான சத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரம். கல், இரும்பு ஆகியவற்றால் பத்து அடி உயரத்திலிருந்து இருபதடி உயரம் வரை கொண்டதாக கீழ்ப்புறம் தூண்களாகவும் மேற்புரம் மாடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மாடங்களிலும் நீர்க்கலன்கள் உள்ளன. அவை பறவைகள் நீர் அருந்துவதற்கானவை. அவை தினமும் நீரால் நிரப்பப்படுகின்றன. தூண்களைச் சுற்றி குறைந்தது நூறு சதுரடி இடம் சுவரிடப்பட்டுள்ளது. பறவைகள் கூட்டமாக இந்த இடங்களில் அமர்கின்றன. நகரின் பெரும்பாலான முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் இவை உள்ளன. இவற்றைச் சுற்றி சிறுதானியங்கள் விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் கூடையிலும் தள்ளுவண்டிகளிலும் தானியங்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். நகரவாசிகள் பலர் தானியங்களை வாங்கி பறவைகள் குழுமியிருக்கும் பரப்பில் தூவுகின்றனர். பறவைகள் ஆர்வத்துடன் கொரிக்கின்றன. அகமதாபாத் நகரில் பார்ப்பதற்கு இனிய காட்சிகளில் இதுவும் ஒன்று.