இன்று மாலை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடல் பார்த்து நீணாள் ஆயிற்று. எப்படி இத்தனை நாள் விடுபட்டது? கரைக்குச் சென்றதுமே அலைகளினுள் சென்று நின்று கொள்வேன். எவ்வளவு பெரிய இருப்பிற்குள் நிற்கிறோம்? கடல் பெரிது. வானம் கடலினும் பெரிது. வானின் ஒரு துளி கடல். நீர்க்குளிர்ச்சியை உணரும் போதே மனம் உற்சாகம் கொள்கிறது. போவதும் வருவதுமான அலைகளின் ஊஞ்சல். கால் மூடும் ஈர மணல். தலைக்கு மேலே வட்டமிடும் பறவைகள். கடலை விட்டுப் பிரியும் போது மனம் சோகம் கொள்கிறது. இப்போதும்.