Sunday, 21 June 2020

சைதன்யம்

மண்மகள் அறிந்த வண்ணச்சீரடிகள்
மகரந்தங்கள் மிதக்கும் காற்று
விதைக்கும் மலருக்கும் இடைப்பட்ட மரம்
இந்த புவியைத் தீண்டுவதில்
மேகங்களுக்குத்தான் எத்தனை ஆனந்தம்
கதிரின் ஓயா விருப்பம்
கணமும் ஓயாத ஆழி அலைகள்
விண் பறக்கும் புள்ளின் வயிற்றில் விருட்சம்