வெயிலில் காயும் புழு
வேதனை உணர்கிறேன்
பரந்த வானின் கீழ்
பெருகிக் கொண்டே செல்கின்றன
பிரிவின் நாட்கள்
ஒவ்வொரு மூச்சும்
நீளச் செய்கிறது
பிரிவின் தூரத்தை
அருகிருந்தது
அமிர்தம்
என் துயரம் அதுவல்ல
என் கண்ணீர்
எதற்கானதும் அல்ல
என்றோ ஒரு நாள்
ஏதோ ஒரு பொழுதில்
ஒளி
பொன் உரு கொள்கையில்
நான்
ஒளியாகாதது
எதனால்?