Monday, 21 September 2020

 உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது
உன்னிடம் கேட்டுக் கொள்ளும் போது
உனக்குத் தருகையில்
உன்னிடமிருந்து பெறுகையில்
சொற்கள் ஏதுமின்றி
உடன் நடக்கும் போது
உன் நினைவுகளில்
மூழ்கியிருக்கும் போது
மிகப் பெரிய இவ்வுலகின்
சிறு சிறு பரப்புகளில்
பூத்திருக்கும் சில மலர்கள்
கிளையமர்ந்து கிரீச்சிடும்
சில பறவைகள்
மென் பூசலிடும் தடாக மீன்கள்
உருவாக்குகின்றன
ஓர் ஒத்திசைவை