Monday, 21 September 2020

 விழுந்து கொண்டிருக்கும்
இலைக்கு
எத்தனை குதூகலம்
மலர்தலின் வெடிப்பு
எவ்வளவு
நுண்மை
புத்தம் புதிய தளிரில்
எத்தனை மென்மை
குட்டி நாய்களுக்குத்தான்
மோப்பத்தில்
எவ்வளவு ஆர்வம்
அதிகாலைக் குளிர்ச்சியில்
நதியில்
மூழ்கி எழுபவன் 
அக
நிச்சலனம்
மொழியை 
நுட்பமாக்குவது போல்
மௌனத்தை
எப்படி 
நுட்பமாக்குகிறாய்