கனிந்த அகம்
அளிக்கும் அமைதி
நீ அறிவாய் தானே
ஒரு புன்னகையின்
மாசின்மை
தரும்
நம்பிக்கை
எத்துணை பெரிது தெரியுமா
உன் நற்சொல் ஓடங்களில்
கடக்கப்படுகின்றன
அன்றாடத்தின் பெருநதிகள்
உனது நினைவுகளை
ஒரு மயிற்பீலியாக
எடுத்துக் கொண்டு
பயணிக்கிறேன்
உனக்கு
ஒரு கனியையோ
ஒரு தளிரையோ
ஒரு மலரையோ
அளிக்க விரும்புகிறேன்
முடிவின்மை முன்
முடிவின்மை என