Tuesday, 22 September 2020

 சீராகப் பெய்யும் மழையொன்றில் நனைவதைப் போல
ஒளியும் நீரும் காற்றும் மணலும் இணைந்திருக்கும்
ஓர் அற்புதமான கடற்கரை அந்தி போல
ஏரியின் பெரும் நீர்ப்பரப்பில் மிதந்தலையும் படகுகள் போல
வாய்க்காலின் சேற்றுப் பரப்பில் ஆங்காங்கே நிற்கும் நீர்மலர்கள் போல
சிட்டுக்குருவியொன்று கடந்து செல்லும் கணத்தைப் போல
உனது நினைவுகள்