சீராகப் பெய்யும் மழையொன்றில் நனைவதைப் போல
ஒளியும் நீரும் காற்றும் மணலும் இணைந்திருக்கும்
ஓர் அற்புதமான கடற்கரை அந்தி போல
ஏரியின் பெரும் நீர்ப்பரப்பில் மிதந்தலையும் படகுகள் போல
வாய்க்காலின் சேற்றுப் பரப்பில் ஆங்காங்கே நிற்கும் நீர்மலர்கள் போல
சிட்டுக்குருவியொன்று கடந்து செல்லும் கணத்தைப் போல
உனது நினைவுகள்