உயிர் எங்கிருக்கிறது என் அன்பே
உயிர் என்னவாய் இருக்கிறது
நா கொள்ளும் தாகம் உடல் அறியும்
ஆத்ம தாகத்தை அறியுமா
உன் இசையின் நீர்மை
தாகத்தை
இன்னும் இன்னும் என
கூட்டிக் கொண்டே செல்கிறது
தாகம் இத்தனை இனியதா கண்ணே
மரணம் இத்தனை இனியதா
கணங்களின் நீள் வரிசை
விடுபடப்போகும்
அத்தருணத்தில்
மென்மையான
அந்த மலரின் மணம்
உன் இசையுடன்
முடிவற்ற வெளியில்
விடுதலை கொண்டு
சஞ்சரிக்கும்