உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று (591)
ஊக்கம் என்பது ஒரு நற்குணம்; ஓர் அருங்குணம். ஊக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். வியக்கும் விதத்தில் திட்டமிடுவார்கள். துல்லியமாகச் செயலாற்றுவார்கள். எந்த சூழலையும் தமக்கு உகந்த விதத்தில் மாற்றியமைப்பார்கள்.
இத்தகைய ஊக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்களே சிறப்புடையவராவர். ஊக்கமே சிறப்பும் செல்வமும் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.