நாற்புறமும் சுவர்கள் சூழ்ந்த
அறைக்குள்
அமர்ந்திருக்கிறாய்
உன் பாதங்களை
தரை எவ்விதம் ஏந்திக் கொள்கிறது
உனது அமைதிக்கு
சாமானியத்தின்
எந்த ஊறும் வந்து விடக்கூடாது
என
எப்போதும் எண்ணியவாறிருக்கிறேன்
எதுவும் சொல்லாதே
எதையும் சொல்லாக்காதே
கனிகள் இனிக்கவே செய்கின்றன
எப்போதும்