துல்லியமான
அத்தனை வெளிப்படையான
பளீரிடும்
அடர்த்தி மிக்க நீல வானத்தைப் பார்க்கும் போது
மெல்ல ஓசையெழும்
லேசாக நுரைக்கும்
சின்ன அலைகள் வந்து செல்லும்
கடற்கரையைக் காணும் போது
ஏரி ஒன்று
நீர் நிறைந்திருக்கும் போது
வெள்ளமென காட்டாறு
பாயும் போது
ஒரு சிட்டுக்குருவியை
ஒரு கிருஷ்ணப்பருந்தை
காணும் போது
உன்னை
நினைத்துக் கொள்கிறேன்
ஒரு பெயராக
ஒரு சொல்லாக
ஒரு உணர்வாக