Monday, 7 December 2020

நினைவு

துல்லியமான
அத்தனை வெளிப்படையான
பளீரிடும்
அடர்த்தி மிக்க நீல வானத்தைப் பார்க்கும் போது

மெல்ல ஓசையெழும்
லேசாக நுரைக்கும்
சின்ன அலைகள் வந்து செல்லும்
கடற்கரையைக் காணும் போது

ஏரி ஒன்று
நீர் நிறைந்திருக்கும் போது

வெள்ளமென காட்டாறு 
பாயும் போது

ஒரு சிட்டுக்குருவியை

ஒரு கிருஷ்ணப்பருந்தை

காணும் போது

உன்னை
நினைத்துக் கொள்கிறேன்

ஒரு பெயராக
ஒரு சொல்லாக
ஒரு உணர்வாக