Tuesday, 8 December 2020

ஆசான் சொல் - 10

செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும்
எஃகதனிற் கூரியது இல் (759)

ஒருவரைப் பகை சூழ்ந்திருக்கிறது. அப்பகையை வெல்ல வழி என்ன? நேரடியாக மோதுவதா? மோதலாம். பகைவர் சூழ்ச்சியை தன் வழிமுறையாகக் கொண்டார்கள் எனில் என்ன செய்வது? பொறாமையால் உடனிருப்பவர்கள் மனம் திரிந்து பகை கொண்டால் என்ன செய்வது? 

திருவள்ளுவர் ஒரு வழிமுறையைக் கூறுகிறார். ஒரு கட்டளையை இடுகின்றார். ‘’செய்க பொருளை’’. பொருளியல் வளர்ச்சி அடைதல் என்கிறார். பொருளியல் வளர்ச்சியே நம் பகைவரின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கும் கூரிய ஆயுதம் என்கிறார். 

எஃகு போன்ற வலிமையான கூரிய ஆயுதம் என்கிறார்.