Monday, 28 December 2020

அம்ருதம்

 என் அரசியே
உன் முன் பணிகிறேன்
உன் பாதத்தால் என் தலையைத் தொடு
என்னைச் சாம்பலாக்கு
குளத்தின் குளிர்ந்த நீர்ப்பரப்பில்
ஓடும் ஆற்றில்
ஆர்ப்பரிக்கும் அலைகடலில்
எங்கேனும்
என் சாம்பல் கரையும் போது
அழிவிலிருந்து
நிகழும்
ஆக்கம்
அப்போது
ஒரு மழைத்துளியாக
உன் முன் 
விழுவேன்
மீண்டும்