Thursday 17 June 2021

27

மலர்க்கண்களால்
மலர்ப்பார்வையால்
நோக்குகிறாய்
உன் உலகம்
உன் உலகம்
நீர்மை
கொள்கிறது
உன் கண்கள்
நீர்த்திரை கொள்கின்றன
ஒரு கணம்
விழி மூடி
விழி திறக்கிறாய்
உலகில் மலர்கின்றன
ஆயிர மாயிரம்
மலர்கள்