Tuesday 16 November 2021

ஐந்தாம் நாள்

இன்று காலை கிராமத்துக்குச் சென்று நண்பரைச் சந்தித்தேன். சென்னை நிகழ்ச்சியின் விபரங்களைக் கூறி பேசிக் கொண்டிருந்தேன். காலை 7 மணிக்குச் சென்றேன். ஒன்பது மணி ஆகி விட்டது. காலை உணவு அருந்தி விட்டு புறப்படச் சொன்னார்கள். சமையல்காரர்கள் ஃபிளாட்டுக்கு வந்து விடுவார்கள் ; மளிகைப் பொருட்களும் காய்கறியும் வாங்கித் தர வேண்டும் என்று சொல்லி விட்டு புறப்பட்டேன். வீட்டுக்கு வந்தால் அவர்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை.  குளித்து உணவருந்தி காணொளியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் மோட்டார்சைக்கிள் சத்தம் கேட்டது. மளிகை காய்கறிப் பட்டியலைக் கொடுத்தார்கள். அரைமணி நேரத்தில் அவற்றை வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் அளித்தேன். 

இன்றைய மெனு தக்காளி சாதம். ‘’தம்’’ முறையில் தயாரித்தனர். 

மாலை கிராமத்துக்குச் சென்று அளித்தேன். அங்கே உள்ள நண்பர் நாளைய உணவுக்குத் தேவையான 50 எலுமிச்சைப் பழங்களை அவருடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்து தந்தார். 

சில இளைஞர்களும் பெண்களும் என்னிடம் வந்து இன்று ஐந்தாவது நாள் அல்லவா என்று கேட்டார்கள். அவர்கள் கூற்றை ஆமோதித்தேன். அனைவரும் மகிழ்கிறார்கள் என்று சொன்னார்கள். நன்றி என்று சொன்னேன்.