Friday 18 February 2022

ஏழைக்கு எழுத்தறிவித்தல் - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,


’’ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ மிக முக்கியமான, சிறந்த பணி.

நான்  கிரந்தம் கற்றுக்கொள்வது பற்றி உங்களிடம் பகிர்ந்துள்ளேன் என்று  நினைக்கிறேன்.

இந்த ஒன்றரை வருடங்களில் நான் உணர்ந்தது, எவ்வளவுக்கெவ்வளவு வெவ்வேறு மொழிகளையும் வரி வடிவங்களையும் கற்றுக்கொள்கிறோமோ, அது நம்மை மிகவும் கூர்மைப்படுத்துகிறது, செம்மைப்படுத்துகிறது. 

நீங்கள் பள்ளி மாணவரகளுக்கு கற்றுக்கொடுப்பதனால் விளையும் நன்மைகள் பல - அவர்கள் பசுமையான நிலம், மிக எளிதில் கற்றுக்கொள்வார்கள். பொதுவாகவே மாணவர் பருவத்தில் பொறுப்புகளும், அவஸ்தைகளும் ஒப்புநோக்க குறைவே, எனவே அவர்கள் வேறு எந்த distraction-உம் இல்லாமல் விரைவில் 
கற்றுக்கொள்வர்.

பிற்காலத்தில் அவர்களை எவரும் மொழி வாரியாக எளிதில் பிரித்தாள முடியாது என்பதும் என் நம்பிக்கை.
(மொழி, மதம் போன்றவைகளைப் பயன்படுத்தி  எளிதில் மக்களை மோதவிட முடியும்; ஏனெனில் அவை அடிப்படையான விஷயம். ஆனால் அடுத்த மொழி/மதம் நமக்குத் தெரியாதது. என்பதனாலேயே  நமக்கு எளிதில் ஒவ்வாமையை உண்டாக்கும். இந்த சாத்தியத்தை உங்ககளது முயற்சி வெல்லட்டும்)

பெரிய வித்தியாசம், நீங்கள் சொல்லியிருக்கும்  - No homework!
இது மிகப்பெரிய அளவில் தயக்கங்களைத் தவிர்க்கும் என்றே நம்புகிறேன். (ஆனாலும், இதை ஒரு மாதத்தில் நீங்கள் தளர்த்திக்கொள்ளலாம் என்றே 
படுகிறது - அட்லீஸ்ட்  விருப்பபட்டவர்களுக்கு மட்டுமாவது)

நான்  என் 10/11 வயதில் கற்றுக்கொண்ட ஹிந்தி வரிவடிவமும் (தேவநாகரி), அடிப்படை வார்த்தைகளும் இன்றும் எனக்கு அவ்வப்போது பயன்படுகிறது.

உங்கள் முயற்சி பெரிய அளவில் அனைவரையும் சென்று சேர்ந்து நலன் விளைய என் பிரார்த்தனைகள்.

ஏதேனும் உதவி தேவைப்படின் நிச்சயம் தெரியப்படுத்தவும். கட்டாயம் செய்கிறேன்.

அன்புடன்,

உலகநாதன்