Sunday 13 March 2022

ஷீரடி டயரி

நூல் : ஷீரடி டயரி . ஆசிரியர் : பாபா சாகேப் கபர்தே பதிப்பகம் : ஸ்ரீ சாயிபாபா சம்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி. மொழிபெயர்ப்பு : சொக்கலிங்கம் சுப்பிரமணியன்

ஒரு ஞானி என்பவர் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பெருநதியைப் போன்றவர். எளிய மனிதர்கள் கரையில் நின்று நதியைக் காண்பவர்களே. அவர்கள் உள்ளங்கைகளில் நீரள்ளி அருந்தி தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ளலாம். நதியில் நீராடி தூய்மையுறலாம். கோடானுகோடி மக்களுக்கு நதி அவ்வாறே அர்த்தமாகிறது. கோடானு கோடி மக்களால் நதி அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. 

மகாராஷ்ட்ராவின் முக்கியமான அரசியல் தலைவராகவும் ‘’லோகமான்ய’’ பால கங்காதர திலகரின் நம்பிக்கைக்குரிய சகாவாகவும் இருந்த திரு. கபர்தே அவர்கள் ஷீரடி சென்று சாயிபாபாவுடன் சில வாரங்கள் தங்கி இருக்கிறார். அப்போது அவர் எண்ணிய எண்ணங்களை உணர்ந்த அனுபவங்களை டைரிக் குறிப்புகளாக எழுதியுள்ளார். 

ஞானியின் வாழ்வு என்பது எளிய மனிதர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது அல்ல. ஒரு மறைஞானியின் (Mystic) வாழ்வு என்பது மேலும் சூட்சுமமானது. 

கபர்டேவின் சொற்கள் வழியே வாசகன் அதனை உணர்கிறான்.