நேற்று செயல் புரியும் கிராமத்திலிருந்து முதல் அலைபேசி அழைப்பு வந்தது. ஆர்வமுள்ள ஒரு இளைஞர் பேசினார். தனது வீட்டுத் தோட்டத்தில் பெரிய இடம் இருக்கிறது. அங்கே தான் தேக்கு மரம் நட விரும்புவதாகத் தெரிவித்தார். நான் நேராக இடத்தைப் பார்வையிட்டு அவருக்கு ஆலோசனை வழங்குவதாகச் சொன்னேன். மேலும் சிலரும் அலைபேசியில் அழைத்து அஞ்சல் அட்டை அவர்களிடம் வந்து சேர்ந்த விபரத்தைத் தெரிவித்தனர். தங்கள் வயல்களை வந்து பார்வையிடுமாறு அழைத்தனர்.