ஒவ்வொரு நாள் கூட கூட உடல் , மனம், நேரம் ஆகிய்வை குறித்த அவதானம் அடர்த்தி கொள்கிறது. காலை ஒருவிதமான மனநிலை. மதியம் ஒருவிதமான மனநிலை. இரவு உணவருந்திய பின் வேறொரு மனநிலை. உடலில் லேசாக ஒரு வலியை உணர்ந்தேன். உடல் எடை குறையத் தொடங்கி விட்டது. உடல் சேகரித்து வைத்திருந்த மிகை சக்தியை இப்போது எடுத்து செலவிடத் தொடங்கும்.