ஔவையார் செங்கல்வராயனிடம் கொடியது கேட்கின் நெடிய வேல் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் . மேலும் அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றும் சொல்கிறார்.
இளமையில் வறுமையைத் தவிர வேறெதையும் காணாத ஒருவன் ஒரு நேர்காணலுக்குச் செல்கிறான். நேர்காணல் குழு அவனிடம் ஒரு கதையைக் கூறுமாறு கூறுகிறது. சாமர்த்தியமாக அவன் தனது சொந்தக் கதையை வேறொரு கதை போல கூறுகிறான். அந்த கதை சொன்னதன் விளைவாக கதைசொன்னவன் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன என்பதே தி. ஜா வின் சிறுகதை ‘’ஆயா’’