Tuesday, 13 December 2022

சுளிப்பு

’’முகம் அகம் காட்டும் கண்ணாடி’’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. முகமே மானுடர்களின் எல்லா உணர்வுகளையும் காட்டுகிறது. அதனால் உணர்வுகள் முகபாவங்களாகவும் மனிதர் நினைவில் ஆழ் மனத்தில் பதிவாகிறது. தான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் முகபாவத்தை வெளிப்படுத்துகிறான் ஒரு ஆரம்பப் பள்ளி சிறுவன் தன் ஆசிரியரிடம். இந்த சம்பவத்தைப் பின்புலமாகக் கொண்டு தி. ஜா எழுதிய சுவாரசியமான சிறுகதை ‘’சுளிப்பு’’