தமிழ் சமூகத்தில் தீபாவளி என்பது மிகப் பெரும் திருவிழா. ஐப்பசி அமாவாசை அன்று தீபாவளி தினம். ஒரு மாதம் முன்பாக புரட்டாசி அமாவாசையில் தீபாவள் விற்பனை தொடங்கி விடும். எங்கள் வட்டாரத்தில் ஒரு லட்சம் குடும்பங்கள் இருக்கிறது எனக் கொண்டால் குடும்பத்துக்கு நான்கிலிருந்து ஐந்து பேர் என ஐந்து லட்சம் பேருக்கு புத்தாடைகள் வாங்கப்பட வேண்டும். சாலையோரக் கடைகளிலிருந்து பெரும் கடைகள் வரை விதவிதமான ஆடைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளியூரில் இருக்கும் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் குடும்பத்துக்கும் ஆடை எடுத்துக் கொண்டு இனிப்புகள் , பழங்கள் , தாம்பூலம் ஆகியவை வாங்கிக் கொண்டு செல்லும் சகோதரர்கள் தீபாவளி வணிகத்தின் முக்கியமான நுகர்வோர். கடைவீதிகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நெல்லிக்காய், பனங்கிழக்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன. கையில் பணத்துடன் கடைவீதி வருபவர்கள் கண்டதும் வாங்குவார்கள் என.
தீபாவளி முடிந்து 15 நாளில் திருக்கார்த்திகை. அதன் பின் ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தைப்பொங்கல். ஓரிரு மாதங்களில் சித்திரைப் புத்தாண்டு.