Saturday 10 August 2024

அமிர்தம் - தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன் 1944ம் ஆண்டு எழுதிய நாவல். கிராம ஊழியன் இதழில் தொடராக வெளியாகியிருக்கிறது. காம குரோத மோக லோப மத மாச்சர்யங்களை ஆறு பகைவர்கள் என்கிறது இந்திய மரபு. நுண்ணினும் நுண்ணியதாய் உள்நுழைந்து ஜீவனை முழுமையாகச் சூழ்ந்து பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை அவை. இந்த இயல்புகளுக்கு இடம் கொடுக்கும் ஜீவன் முழுமையாக இந்த இயல்புகளின் ஊர்தியாகிறான். இந்த இயல்புகளின் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமை ஆகிறான். இந்த இயல்புகள் கூறும் நடிப்புகளை வெளிப்படுத்தும் நடிகன் ஆகிறான். ஆலய நகரம் ஒன்றின் சில வீதிகளையும் சில வீடுகளையும் அதில் இருக்கும் சில மனிதர்களையும் கதாபாத்திரமாகக் கொண்டு அந்த ஊரின் சமூகப் பொருளியல் பின்னணியில் தீவிரமான உறவுச் சிக்கல்களையும் இந்த புதைமணலிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு மனுஷியின் கதையையும் பேசுகிறது தி. ஜானகிராமனின் அமிர்தம் நாவல்.