Wednesday 21 August 2024

விருட்ச சன்னிதானம்


 நேற்று நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது வீட்டை ஒட்டி சற்று பெரிய பரப்பில் காலிமனை இருந்தது. அதில் நாற்பது வயதான வேப்பமரம் ஒன்று இருந்தது. இரு கைகளால் சுற்றி நெருங்க முடியாத அளவு பருமன். பெரும் உயரம். தனது நிழல்பரப்பின் மீது கம்பீரமாக நின்றிருந்தது. அதன் நிழல்பரப்பில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களிலிருந்து சிறு சிறு வேப்பஞ்செடிகள் கணிசமாக முளைத்திருந்தன. வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. நான் அதில் அமர்ந்து கொண்டேன். அந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அருகில் சென்று அந்த மரத்தின் மீது எனது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டேன். மரத்தின் குளுமையை கரங்கள் உணர்ந்தன. கரங்களின் குளுமை உள்ளத்தைக் குளிர வைத்தது. அந்த ம்ரமும் அதன் நிழல்பரப்பும் விருட்ச சன்னிதானம் என எண்ணினேன். 

வேப்ப மரத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு பலாமரம் இருந்தது. கைக்கு எட்டும் தொலைவில் அதில் ஒரு பழம் பழுத்திருந்தது.