பண்டைய வரலாற்றுக் காலகட்ட கதை ஒன்றை எழுதியிருக்கிறார் தி.ஜா. அக்கதையே ‘’தாத்தாவும் பேரனும்’’. பேத புத்தியை அகத்தில் கொண்டிருக்கிறான் பாட்டன். பாட்டன் மேல் குரோதம் கொண்டிருக்கிறான் பேரன். பேதமும் குரோதமும் ரணகளத்துக்கு இருவரையும் இட்டுச் செல்கின்றன. இருவரும் அடைந்தது என்ன என்னும் கேள்விக்கான பதிலை வாசகனைச் சிந்திக்கச் செய்கிறது. இருவரும் இழந்தது என்ன என்பதையும் வாசகனை உணர வைக்கிறது.