இரண்டு குடும்பங்கள் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கின்றன. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு ‘’ஐலுரோஃபோபியா’’. அதாவது பூனையைக் கண்டால் பயம். எதிர் வீட்டில் குடியிருக்கும் குடும்பம் வளர்ப்புப் பூனையை குழந்தை என வளர்க்கிறது. இந்த இரு குடும்பத்துக்கும் பூனையால் நடக்கும் இரு சம்பவங்களே தி. ஜா வின் ‘’சந்தானம்’’ சிறுகதை.