ஒவ்வாத காமம் ஒருவன் மனதில் ஏறுகிறது. ஆட்கொல்லி என அவனைச் சூழ்கிறது. திமிறுகிறான். மீள விரும்புகிறான். ஒரு சிறுவன் உற்சாகமாக அட்டைப்பெட்டி ஒன்றை காலால் எத்தித் தள்ளி சாலையில் நடப்பதைக் காண்கிறான். அந்த காட்சி அவனுக்குள் ஒரு நல்மாற்றத்தை உண்டாக்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’மனநாக்கு’’.