Friday, 7 February 2025

மனிதாபிமானம்

 1970 ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா தன்னை பொருளியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த ஆண்டுகள். சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. நாட்டின் வரி வருவாயை எவ்விதம் பெருக்குவது என்பது அரசின் முக்கிய கரிசனமாக இருந்தது. இந்த பின்னணியில் மத்திய தர வாழ்க்கை என்பது பல்வேறு நெருக்கடிகளைக் கொண்டது. ஒரு மத்திய வர்க்க மனிதன் ஒரு நெருக்கடியான பஜாரில் கைக்கடிகாரம் பழுது நீக்க செல்லும் கதை தி.ஜா வின் ‘’மனிதாபிமானம்’’.