ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் அற உணர்வு ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. கிருத யுகத்தில் அற உணர்வு மிக மேலோங்கி இருக்கிறது. கலியுகத்தில் இருக்கிறதா இல்லையா என ஐயுறும் வகையில் இருக்கிறது. இதனைப் பின்புலமாகக் கொண்டு தி.ஜா எழுதிய கதை ‘’தர்மம்’’.