Friday, 4 April 2025

தங்கம்

 பள்ளிப் படிப்பில் ஆர்வமே இல்லாத ஒரு மாணவன். பள்ளிக்கு நேரத்துக்கு வருவதில்லை. பாடம் படிப்பதில்லை. வகுப்பை கவனிப்பதில்லை. எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. பள்ளி நேரத்தில் சினிமா தியேட்டரிலேயே வாசம் செய்பவன். இவ்வாறான இயல்பு கொண்ட ஒருவன். 100 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன் அந்த மாணவன். அவன் அன்னை அவனை எண்ணி கவலை கொள்கிறாள். ஆசிரியர்கள் கவலை கொள்கிறார்கள். அவன் சாமானியர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத ஒரு செயலை மிக இயல்பாகச் செய்கிறான். தங்கம் மண்ணுக்குள் புதைந்திருப்பது போல அரிய இயல்பை தனக்குள் வைத்திருப்பவன் அவன் என அனைவரும் உணரும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்த சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா.