Saturday, 5 April 2025

உண்டை வெல்லம்

 திரைத்துறையைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட புனைவுகளில் உடன் நினைவுக்கு வருவது அசோகமித்திரனின் ‘’கரைந்த நிழல்கள்’’, ‘’மானசரோவர்’’ சுஜாதாவின் ‘’கனவுத் தொழிற்சாலை’’. தி.ஜா திரைத்துறையை பின்னணியாகக் கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அதில் ஒன்று ‘’உண்டை வெல்லம்’’.