மயில்சாமி ஒரு சாமானியன். கைக்கும் வாய்க்கும் பற்றாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன். ருஷ்யா விண்வெளியில் ‘’ஸ்புட்னிக்’’ செயற்கைக்கோளை அனுப்பிய தினத்தில் அவன் நடித்த முதல் படம் வெளியாகிறது. அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கை நிறைய காசு சேர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்புட்னிக்கின் நினைவாக ‘’சுபத்னியகம்’’ என தான் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு பெயர் வைக்கிறான் மயில்சாமி. திடீரென ஒரு நாள் எதிர்பாராத பணமுடை ஏற்படுகிறது. மிகச் சிறு தொகைதான். கொல்லத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல. நாற்பது ரூபாய் கொடுங்கள் ; நான்கு நாளில் நூறு ரூபாயாகத் திருப்பித் தருகிறேன் என வாங்கிச் செல்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மயில்சாமியின் தேவை’’ கதை.