Monday, 7 April 2025

ஒரு பொருளியல் பொய்

 இரண்டு தினங்களுக்கு முன்னால், காணொளி ஒன்றில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருந்த பாடல். அதன் முதல் வரி ‘’மனிதநேயத்தின் மறுபெயர் மார்க்ஸ்சியம்’’ என ஒலித்தது. அது ஒரு பொருளியல் பொய். 

மானுடத்தின் நீண்ட வரலாற்றில் உலகெங்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களையும் படுகொலைகளையும் குறித்து ஆர்.ஜே.ரம்மல் என்ற அறிஞர் ஆவணப்படுத்தியிருக்கிறார். 1917ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின் படி , இந்த எழுபது ஆண்டுகளில் உலகெங்கும் கம்யூனிச ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட சாமானிய மக்களின் எண்ணிக்கை பதினான்கு கோடியே எண்பது லட்சம் ( 14,80,00,000). இந்த படுகொலைகளில் மிக அதிக எண்ணிக்கை ருஷ்யாவில் நடந்தது. எளிய மக்களைக் கொன்று குவிக்கச் சொல்லி உத்தரவு கொடுத்தவர் அப்போதைய ருஷ்ய அதிபராயிருந்த ஜோசஃப் ஸ்டாலின். 

இன்றும் தன் கட்சி அலுவலகங்களில் ஜோசஃப் ஸ்டாலின் படத்தை மாட்டி வைத்திருக்கின்றனர் கம்யூனிஸ்டுகள். ஜோசஃப் ஸ்டாலின் படத்தை ஏந்திக் கொண்டு மனிதநேயம் குறித்து மார்க்ஸிஸ்டுகள் பேசுவது வரலாற்றின் நகைமுரண்களில் ஒன்று !

ஸ்டாலின் நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள :

https://hawaii.edu/powerkills/