செவ்வியல் உணர்வு கொண்ட கலைஞன் ஒருவன். கலையையே தன் வாழ்வெனக் கொண்டவன். நுண்ணியதிலும் நுண்ணியதாக தன் கலையை கலை உணர்வை நுணுக்கமாகக் கொண்டிருப்பவன். ஜனரஞ்சகம் அவன் சூழலை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவனுக்கு அது ஏன் என புரியவில்லை. வாழ்நாள் முழுக்க தான் செய்த கலை சாதனையின் பாதையிலிருந்து அவனால் பாதை மாற முடியவில்லை. இந்த கலைஞனின் செவ்வியல் இசையை முதல் முறையாகக் கேட்கும் ஒரு மேலை நாட்டு இசைக் கலைஞன் செவ்வியல் கலைஞனின் கலை உன்னதத்திலும் அதி உன்னதமானது என உணர்ந்து அக்கலைஞனின் கலை முன் பணிகிறான். அக்கலையில் அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது ; செவ்வியல் கலைஞனுக்கும் ஒரு செய்தி கிடைக்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’செய்தி’’.