ஊரிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் பாதை அகலமாக்கிப் போடப்பட்டுள்ளது. சிறு ஊர்களுக்குக் கூட புறவழிச்சாலை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது பல ஊர்கள் அகலப்படுத்தப்பட்ட சாலையால் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளன. பயண நேரம் என்பது கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது அதனை உணர்ந்தேன். காரில் பயணிப்பவர்கள் அதனை மேலும் உணரக் கூடும்.