’’குமரகுருபரரின் பிரபந்தத் திரட்டு’’ என்னும் நூலை வாசித்து வருகிறேன். உ.வே.சா விளக்கவுரையுடன் கூடியது. அந்நூலில் குமரகுருபரரின் முக்கியத்துவம் குறித்து உ.வே.சா மிக விரிவாகப் பதிவு செய்கிறார். குமரகுருபரரின் வாழ்க்கையை உ.வே.சா சொற்களில் வாசிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.