Wednesday, 24 September 2025

அஞ்சலி : எஸ் எல் பைரப்பா


 கன்னட மொழியின் ஆகப் பெரிய படைப்பாளிகளில் ஒருவரான எஸ் எல் பைரப்பா இன்று காலமானார். 

மகாபாரதத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய ‘’பருவம்’’ நாவல் மிக முக்கியமானது ; புகழ் பெற்றது. ஒரு தென் கன்னட கிராமத்தின் கதையான ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ மகத்தான ஆக்கம் ஆகும். 

கன்னட இலக்கியச் சூழலில் 80 ஆண்டுகளாக மிகத் தீவிரமாகச் செயலாற்றியவர் எஸ் எல் பைரப்பா. 

ஆசானுக்கு அஞ்சலி